புதிதாய் ஒரு மாற்றம்
புதியதான மாற்றங்கள் சென்று போகுதே !
மெதுவாய் அவளை நோக்கி
என் பார்வை பாய்கின்றதே !
அவளின் சிரிப்புகள் கண்டு
என் மனம் மகிழுதே அன்பே !
கனவில் தோன்றிய உன் உருவம்
நினைவில் தோன்ற அழைக்கின்றேன்
பகலில் தோன்றிய சூரியனும்
உன்னை கண்டு மறைகிறதே!
இரவில் தோன்றிய விண்மீனே
உன் கரம் காண வருகின்றேன்
காதலியே !!!
உன்னோடு இணைந்திட வேண்டும்
இறப்பினையும் நான் ஏற்றிட வேண்டும்
துன்பத்தையும் பகிர்ந்திட வேண்டும்
கலங்காமல் சொல்ல வருவாயா???

No comments:
Post a Comment