அன்னையின் முகம் பார்த்தே
சூரியனும் உதிக்கும்
காலை நேரங்களில்
தென்றலும் பூத்திடும்
தந்தை புகழ் பாடவே
தினமும் பறவைகள் பாடும்
அருள் பெற்ற கற்சிலையாய்
இருப்பது நம் பெற்றோர்
செவ்வமாய் நம்மை செதுக்கியவர்களை
சிதர வைக்கின்றாய்
சில்லரைக்கு விற்று இருக்கின்றாய்
உணவுக்காக கண்ணீருடன் கைநீட்டி
நிற்பவர் நம்மை பெற்ற தெய்வங்கள் தானே
நமக்காக வாழ்க்கையில் போராடியவர்களை
நாமே வாழவைப்பது இல்லை
இருக்க சிறு இடமும் அளிப்பதில்லை
இதை நினைக்கையில் என் கண்களும் கலங்குதே !
உடலில் நல்லுயிரும் இருந்திருந்தால்
இந்நிகழ்வு நிகழ்ந்திடுமா ?
கடவுள் செய்த தவறுகளிலே
ஆறாம் அறிவே முதலிடமே !
ஐந்தறிவு விலங்குகளும்
கூட்டமாக வாழ்ந்திடுமே!
இதை நினைக்கையில் மனிதனை விட
விலங்காய் இருப்பதே மேல்!!!

No comments:
Post a Comment